அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

குர்ஆன் | by ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி On Jul 19, 2023 Viewers: 282


அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

-ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி


அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது!


யானை படை


அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன? ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது? என அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றீர்களா? வாருங்கள் கதைக்குள் செல்வோம்


மக்கா புனித பூமி என்பதை அறிவீர்கள். அதற்கு ‘உம்முல் குரா” – நகரங்களின் தாய்- என்ற பெயரும் உண்டு. அங்குதான் ‘பைதுல் அதீக்” எனப்படும் பழமையான ஆலயமான ‘கஃபா” உள்ளது. கஃபாவை மக்கள் பெரிதும் மதித்து வந்தனர். யமனில் ‘ஆப்ரஹா” என்றொரு மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் ‘ஸன்ஆ”வில் மிகப் பிரம்மாண்டமான கலை நுணுக்கம் மிக்க ஒரு ஆலயத்தைக் கட்டினான். மக்கள் கஃபாவை விட்டு விட்டு இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்தான். அவனது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.


கஃபாவின் மதிப்பைக் கெடுக்க முனைந்த அவனது நாட்டம் நிறைவேறவில்லை. இதே வேளை, இந்த மன்னனின் சதியால் ஆத்திரமுற்ற சிலர் அந்த ஆலயத்தையும் அசிங்கப்படுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமுற்ற மன்னன் கஃபாவைத் துண்டு துண்டாகத் தகர்த்துவிட்டால் அதன் பின்னர் தனது ஆலயத்தை நோக்கித்தான் மக்கள் வர வேண்டும் என்று கணக்குப் போட்டான். ஒரு நாள் அவன் மிகப் பெரும் யானைப் படையுடன் மக்கா நோக்கிப் படையெடுத்தான். கஃபாவை மதித்து வந்த சில அரபிகள் அவனுடன் சண்டையிட்டு தோல்வி கண்டனர்


அப்துல் முத்தலிப்


அவன் கஃபாவிற்கு அருகில் வந்த போது அங்குள்ள கால் நடைகளைக் கைப்பற்றிக் கொண்டான். நபி(ச) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களது 200 ஒட்டகங்களையும் பிடித்துக் கொண்டான். கஃபா அருகில் வந்த ‘ஆப்ரஹா” மக்காவாசிகளுக்கு ஒரு செய்தி அனுப்பினான். ‘எனக்கு உங்களுடன் போர் செய்யும் எண்ணம் இல்லை. கஃபாவை உடைப்பது மட்டுமே எனது நோக்கம்” என்பதுதான் அந்தச் செய்தி! மக்காவின் தலைவர் அப்துல் முத்தலிப் மன்னன் ஆப்ரஹாவைச் சந்தித்தார். மன்னனும் அவரது அழகிய தோற்றம், வயது என்பவற்றைக் கண்ணுற்று அவரை மதித்தான். அவர் மன்னனிடம், ‘உங்கள் தளபதிகள் என் 200 ஒட்டகங்களை எடுத்துக் கொண்டார்கள். அதை திருப்பித் தாருங்கள்” என்றார். இது கேட்ட மன்னன், ‘உங்களது ஆலயத்தை நான் உடைக்க வந்துள்ளேன். நீங்கள் அது பற்றிப் பேசுவீர்கள் என நினைத்தேன் ஆனால், நீங்கள் உங்கள் ஒட்டகத்தைப் பற்றிப் பேசுகின்றீர்களே” என ஆச்சரியத்துடன் கேட்டான்


அதற்கு அப்துல் முத்தலிப், ‘ஒட்டகத்திற்கு உரிமையாளன் நான். எனவே, அது பற்றி நான் பேசுகின்றேன். இந்த ஆலயத்திற்கு உரிமையாளனான ஒரு இறைவன் இருக்கின்றான். அதை அவன் பார்த்துக் கொள்வான்” என்று கூறினார்.


அப்துல் முத்தலிபிடம் அவருக்குச் சொந்தமான ஒட்டகம் கொடுக்கப்பட்டது. அவர் கஃபாவுக்கு வந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இந்தப் படையை எதிர் கொள்ள நம்மிடம் பலம் இல்லையே என வருந்தி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள். பின்னர் மலை உச்சிகளுக்குச் சென்றுவிடுமாறு மக்களுக்கு அப்துல் முத்தலிப் உத்தரவிட்டார்கள். அதோ அந்தப் படை ஆணவத்துடன் கஃபாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. திடீரென தலைமை யானை கஃபாவை நோக்கிச் செல்லாது அடம்பிடிக்க ஆரம்பித்தது. அது கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்தது. யமன் நோக்கிச் செல்லத் திருப்பினால் செல்லத் தயாரானது. கஃபாவை நோக்கி நகர்த்தினால் படுத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் அதை அசைக்க முடியவில்லை.


அபாபீல்


அப்போது தான் பல்லாயிரக்கணக்கான ‘அபாபீல்” எனும் சிறு பறவைக் கூட்டம் வந்தது. அவற்றின் கால்களிலும் சொண்டுகளிலும் சிறு சிறு கற்கள் இருந்தன. அவை அவற்றை அந்தப் படை மீது வீசின. அந்தக் கற்கள் பட்டவர்கள் செத்து மடிந்தனர். ஆணவத்துடன் வந்த யானைப் படை சிதறுண்டு போனது. அந்தப் படையுடன் மன்னன் ஆப்ரஹாவும் அழிக்கப்பட்டான். இந்த நிகழ்வால் கஃபாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. இன்ஷா அல்லாஹ் உலக அழிவு நெருங்கும் வரை யாரும் இந்த கஃபாவை எதுவும் செய்ய முடியாது!


உலக அழிவு நெருங்கும் போது இந்தக் கஃபா உடைக்கப்படும். யானைப் படை அழிக்கப்பட்ட அந்த ஆண்டு ‘ஆமுல் பீல்” -யானை வருடம்- என்று கூறப்படும். இந்த நிகழ்வு நடந்த ஆண்டில்தான் இறுதித் தூதர் முஹம்மத் ( ச ) அவர்கள் பிறந்தார்கள்.


அழிக்கப்பட்ட இந்த யானைப் படை பற்றி சூறா ‘அல் பீல்” – யானை வருடம் – எனும் (நூற்றி ஐந்தாவது) அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE